Friday, May 20, 2005

இருட்டு

Dark Posted by Hello


'05 மே, 20 வெள். 09:38 கிநிநே.

ஒளிர்வு

Light Posted by Hello


'05 மே, 20 வெள். 09:38 கிநிநே.

Tuesday, May 17, 2005

சிரிப்பும் மினுக்கும்

Silk & Smile Posted by Hello

நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம் நடைபாதையோரம், பொஸ்ரன்
'05 மே, 17 செவ். 15:21 கிநிநே.

முரண்

Contrast Posted by Hello

பெயார்லோன் ஒழுங்கை, ஓக் குரோவ்
'05 மே, 17 செவ். 09:22 கிநிநே.

Monday, May 16, 2005

சிலிர்ப்பு

Sensation Posted by Hello

ஓக் க்ரோவ், பொஸ்ரன் புறநகர்
'05 மே, 11 புத.

Sunday, May 15, 2005

இரட்டைப்பச்சையர் - ஆ

Spiral Sisters - II Posted by Hello

வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 17:12 கிநிநே.

இரட்டைப்பச்சையர் - அ

Spiral Sisters - I Posted by Hello

வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 17:12 கிநிநே.

Saturday, May 14, 2005

இ(ல்)லை - ஆ

CrimsoOn - II Posted by Hello

வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 16:53 கிநிநே.

இ(ல்)லை - அ

CrimsoOn - I Posted by Hello

வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 16:52 கிநிநே.

Friday, May 13, 2005

மஞ்சட்காய்ச்சல் - ஆ

Yellow Fever - II Posted by Hello

பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.

மஞ்சட்காய்ச்சல் - அ

Yellow Fever - I Posted by Hello

பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.

Thursday, May 12, 2005

தயக்கம்

Hesitation Posted by Hello

நகரத்து மரமொன்று
'05 மே 11, புத. 18:57 கிநிநே

பயம்

Fear Posted by Hello

நகரத்து மரமொன்று
'05 மே 11, புத. 18:56 கிநிநே

Wednesday, May 11, 2005

பசுமை: சுருளுதலும் பரவுதலும் - ஆ

Green: Spiral & Spread IIPosted by Hello


நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம்
'05 மே 11, புத. 14:54 கிநிநே.

பசுமை: சுருளுதலும் பரவுதலும் - அ

Green: Spiral & Spread I Posted by Hello


நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம்
'05 மே 11, புத. 14:54 கிநிநே.

குடம்-தாங்கி

Ball Bearer Posted by Hello

கொலம்பஸ் வீதி, பொஸ்ரன்
'05 மே 10, செவ். 13:35 கிநிநே.

Tuesday, May 10, 2005

இளங்குருத்து

Greenland Posted by Hello

கொலம்பஸ் வீதி, பொஸ்ரன் மாநகர்
'05 மே, 10 செவ். 13:37 கிநிநே.

Saturday, May 07, 2005

ஓ கிட்ஸ்!

Oh kids! Posted by Hello

பூத்தொடுத்தல்

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான் -
ஒரு வேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய

-(உமா மகேஸ்வரி
("வெறும் பொழுது" தொகுதியிலிருந்து)

Thursday, May 05, 2005

புள்ளோடும் புல்லோரம்

drib Posted by Hello

புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை ஆதலால்
நீ புல்லியதல்லனை புல்லே
;-)
[குறுங்கோழியூர்கிழாரின் புறநானூற்று "மண்ணும் உண்பர்" இற்கு மன்னிப்புடன் ;-)]

வெண்பொட்டுப்பசுமை

Polka Whites on Green Posted by Hello

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.
-கூடலூர்க்கிழார்
(
ஐங்குறுநூறு)

Tuesday, May 03, 2005

கல்லும் மலரும்

Rock 'n Red Posted by Hello


"பாறையில பூ முளச்சி, பாத்தவக யாரு?"

நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?

நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?

நான் அறியேன்.

ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.

வேர் ஏன் அறுந்தது?

அத்தேசம் என்னை
உயிர்ப்பிக்கட்டும்.

என்னைத் தள்ளுங்கள்

தள்ள முடியாதவை
எல்லாவற்றையுமே
உரைத்துப் பாருங்கள்
நிறுத்துக் கொள்ளுங்கள்.

நிறுவைப் படிகள்
உங்கள் கைகளில்.

காவிரிப் படுகையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கா¢சல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?

பருத்தி வெடித்தால்
தறியினில் நெய்யலாம்,
கரும்பு விளைந்தால்
ஆலையில் பிழியலாம்,
கம்பு பயிரானால்
கூழ் காய்ச்சிக் குடிக்கலாம்,
கூட்டு நினைவினில்
பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்....
கருத்துகள் பற்றிக் கொள்ளும்

சந்தேகம் கொள்ளற்க
கற்களின் உரசலில்
தீப்பொறி தெறிக்கும்.
பாறை இடுக்கிலும்
நீர்மை கசியும்.

சொர்க்க பூமியும்
கனவுத் தேசமும்
எங்குமே இல்லை.

இரத்தமும் சதையுமாய்த்தான்
பாதைகள் வி¡¢யும்
என் தேசம் போல
வெந்து தணியாக் காடாக....

நீலமலைத் தொடா¢னின்றும்
ராமர் அணை மேட்டிலிருந்தும்
எட்டிச் செல்லாப்
பாடமாக....

இன்றுபோய் நாளை வரும்.
உயிர்ப்பேன்
உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா
கலைச் செல்வங்கள் காவியும்
நெஞ்சு முட்ட
அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி
வருவேன்-
முகம் பெற்றவனாக

1988 பாக்கு நீரிணை

-கி. பி. அரவிந்தன்
("முகம் கொள்" இலிருந்து)

Monday, May 02, 2005

பூஉஉஉ

Posted by Hello

.....மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே.... ;-)
(சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்)